செல்வ விநாயகனே சரணம்...பாட்டு
செல்வ விநாயகனே சரணம்
வல்லவனே எமக்கென்றும்
நல்லன செய்வாய்...செல்வ
பல்வகை செல்வமும் பாரினில் யாம் பெற..
அல்லல்கள் நீங்கிட வரமருள்வாயே..
எம் அல்லல்கள் நீங்கிட வரமருள்வாயே...செல்வ
ஓம் எனும் நாதத்தின் உயர் பொருள் நீயே..
ஓங்கியே சிறப்புற கணபதி நீயருள்வாய்..
புண்ணிய க்ஷேத்திரத்தை புகழ் பெறச் செய்வாய்...
எம் புண்ணிய க்ஷேத்திரத்தை புகழ் பெறச் செய்வாய்...
எண்ணிய எல்லாம் நிறைவுற அருள்வாய்..
யாம் எண்ணிய எல்லாம் நிறைவுற அருள்வாய்..செல்வ
Comments
Post a Comment