செல்வ விநாயக வாவாவா...பாடல்
செல்வ விநாயக வா வா வா
வந்தே ஒரு வரம் தா தா தா
பார்வதி புத்ரா வாவாவா
பரமனின் புதல்வா வாவாவா
கந்தனின் அண்ணா வா வா வா
கனிவுடன் ஒரு வரம் தா தா தா(செல்வ)
பானை வயிறனே வாவாவா
யானை முகத்தனே வா வா வா
பக்தரைக் காத்திட வாவாவா
பணிந்தேன் ஒரு வரம் தா தாதா
(செல்வ)
குள்ள குள்ளனே வா வா வா
குண்டு வயிறனே வா வா வா
வலம்புரி நாதா வா வா வா
வந்திங்கு ஒரு வரம் தா தா தா (செல்வ)
தும்பிக்கை நாதனே வாவாவா
நம்பிக்கை எமக்கு தாதாதா
சங்கடம் நீக்கிட வாவாவா
மங்கலம் அருளிட வாவாவா(செல்வ)
மோதகக் கையனே வாவாவா
சாதகம் எமக்கே செய்திடுவாய்
தாமதிக்காமல் வாவாவா
நல்ஞானத்தை எமக்கு தாதாதா(செல்வ)
எல்லாம் அறிந்த செல்வ விநாயக
எவ் வரம் கேட்பேன் தெரியாதா
புண்ணியக்ஷேத்திர மாந்தரையே
அன்புடன் காத்தருள் புரிந்திடுவாய்(செல்வ)
Comments
Post a Comment